டியூசனுக்கு சென்ற பிளஸ்–2 மாணவி மாயம்: போலீசார் விசாரணை!!
Read Time:50 Second
விழுப்புரம் அருகே உள்ள கெடார் காலனியை சேர்ந்தவர் ராஜாராமன் இவரது மகள் ஆஷா (வயது 17) இவர் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். கடந்த 23–ந் தேதி காலை 11 மணிக்கு டியூசனுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து கெடார் போலீசில் ஆஷாவின் தாய் விஜயா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆஷாவை தேடி வருகின்றனர்.
Average Rating