பெண் தர மறுத்ததால் அக்காள் மகனை கொன்ற தாய் மாமன் கைது!!

Read Time:1 Minute, 43 Second

3380786Untitled-1பேரணாம்பட்டு அடுத்த வாலத்தூர் அம்பேத்கர் நகர் அருகே சுமார் 65 அடி ஆழமுள்ள கிணற்றில் தேவலாபுரம் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் செல்வக்குமார் (வயது29) பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவறிந்த மேல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது செல்வகுமாரின் செல்போன் மற்றும் மோட்டார்சைக்கிள் அவரது தாய் மாமன் கார்த்திகேயன் வீட்டில் இருந்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கு சம்பந்தமாக கார்த்திகேயன் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர்.

விசாரணையில், கார்த்திகேயனும், செல்வகுமாரும் கடந்த 15–ந் தேதி கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது கார்த்திகேயன் செல்வகுமாரிடம் அவரது சகோதரியை பெண் கேட்டுள்ளார்.

இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திகேயன் செல்வகுமாரை கிணற்றில் தள்ளி கொலை செய்தது தெரிய வந்தது.

இதனையடுத்து போலீசார் கார்த்திகேயனை கைது செய்தனர். அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வரதட்சணை கொடுமை: தூக்கில் பிணமாக தொங்கிய பெண்!!
Next post சாலை விபத்தில் பலியான முதலாளியை புதைத்த இடத்தில் படுத்துக்கிடந்த நன்றியுள்ள நாய்!!