கல்வீசி தாக்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு முத்தமிட முயன்ற வாலிபர்!!

Read Time:1 Minute, 53 Second

c6ccf430-bef5-400c-b46e-1a241cfecb7d_S_secvpfபொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரம்ஜான் பேகம்(வயது 24). இன்னும் திருமணமாகவில்லை. இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முகமது ஜின்னா(35). கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உள்ளவர்.

இவரது தந்தை பாட்சா. போதையில் வீட்டுக்கு வந்த முகமது ஜின்னா தனது தந்தையுடன் தகராறு செய்தார். அப்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கிக்கொண்டனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ரம்ஜான்பேகம் அவர்களை தட்டிக்கேட்டார். இதில் முகமது ஜின்னா ஆத்திரமடைந்து ரம்ஜான் பேகத்தை அவதூறான வார்த்தைகளால் திட்டினார்.

பின்னர் ‘உனக்கு முத்தம் கொடுத்தால் தான் சரிப்படுவாய்’ என்று கூறிக்கொண்டே ரம்ஜான்பேகத்தை நோக்கி வந்தார். மிரண்டு போன ரம்ஜான்பேகம் வீட்டுக்குள் ஓடினார்.

அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த முகமது ஜின்னா ஆவேசமாக ரம்ஜான் பேகத்தை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார். அவர் சத்தம் போடவே முகமதுஜின்னா அங்கிருந்து ஓடி விட்டார்.

தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஆனைமலை போலீசில் ரம்ஜான்பேகம் புகார் செய்தார். சப்–இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து முகமது ஜின்னாவை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணை கடத்தி கொன்று கிணற்றில் பிணம் வீச்சு: டிரைவர்–கண்டக்டர்கள் 4 பேர் சிக்கினர்!!
Next post 2 மனைவிகளால் குடும்பத்தகராறு: தற்கொலை முயற்சியில் தீயில் கருகிய போலீஸ் தம்பதி!!