பழனியில் நடத்தை சந்தேகத்தால் மனைவியை வெட்டி சாய்த்த கணவன்!!

Read Time:1 Minute, 21 Second

2cb48695-8f9d-4291-8832-d9ac8164603c_S_secvpfபழனி அருகில் உள்ள சண்முகம் பாறை ஓடக்காடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது32). விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி மருதகாளி (29). தனது மனைவியின் நடத்தையில் பரமசிவத்துக்கு சந்தேகம் இருந்து வந்தது.

இதனால் கணவன்– மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று வீட்டிற்கு குடிபோதையில் வந்த பரமசிவம் மனைவியிடம் இருந்த புதிய செல்போனை பார்த்து இது யாருடையது? யார்? வாங்கி கொடுத்தார்கள் என சத்தம்போட்டார்.

இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்படவே அரிவாளால் மனைவியை வெட்டினார். படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் பழனி தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

மேலும் தப்பி ஓடிய பரமசிவத்தை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மயிலாடுதுறையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட 2 இளம்பெண்கள் மாயம்!!
Next post திண்டுக்கல் அருகே 2 மைனர் பெண்களின் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!