டெல்லி ஐ.ஏ.எஸ். அதிகாரி வீட்டில் 25 வயது பணிப்பெண் தற்கொலை!!
Read Time:1 Minute, 24 Second
புது டெல்லியில் உள்ள பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் வீட்டில் 25 வயது மதிக்கத்தக்க பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய மோத்தி பாக் பகுதியில் வசிக்கும் அந்த பெண் ஐ.ஏ.எஸ்.அதிகாரியின் வீட்டையொட்டியுள்ள பணியாளர் குடியிருப்பில் தங்கியிருந்த அந்த பணிப்பெண், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த சரோஜினி நகர் போலீசார், சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த அந்தப் பெண், மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாகவும், தற்கொலை செய்துக் கொண்ட அறையில் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
Average Rating