மகளை கிண்டல் செய்ததை தட்டிகேட்ட பெண் மானபங்கம்: பந்தல் கட்டும் தொழிலாளி கைது!!
Read Time:1 Minute, 16 Second
தென்தாமரை குளத்தை அடுத்த செட்டிவிளையை சேர்ந்தவர் எழில்வண்ணன். இவரது மனைவி அன்னலதா (வயது 29). இவரும் இவரது 10 வயது மகளும் நேற்று மாலை அருகில் உள்ள கடைக்கு பொருள்கள் வாங்க சென்றனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த பந்தல் கட்டும் தொழிலாளி முத்து (வயது 44) என்பவர் அன்னலதாவின் மகளை கேலி கிண்டல் செய்தார். இதனை அன்னலதா தட்டி கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த முத்து திடீரென அன்னலதாவின் சேலையை பிடித்து இழுத்து அவரை மானபங்கம் செய்தார். அதோடு தகாத வார்த்தைகளும் பேசினார்.
இதுபற்றி அன்னலதா தென்தாமரை குளம் போலீசில் புகார் செய்தார். சப்– இன்ஸ்பெக்டர்கள் கோலப்பன், தேவசகாயம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து பந்தல் கட்டும் தொழிலாளி முத்துவை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating