சித்தோடு அருகே மளிகை கடைக்கு சென்ற இளம்பெண் மாயம்!!
Read Time:1 Minute, 3 Second
சித்தோடு அருகே ஆர்.என். புதூரில் உள்ள மாதேஸ்வரன் நகர் என்ற இடத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ராதிகா (வயது 15).
சம்பவத்தன்று வீட்டில் இருந்த ராதிகா அருகே உள்ள மளிகை கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த ராதிகாவின் பெற்றோர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவரை காணவில்லை.
எனவே இது பற்றி செல்வராஜ் சித்தோடு போலீசில் புகார் செய்தார். அதில் காணாமல் போன தனது மகள் ராதிகாவை மீட்டு கொடுக்கும்படி கூறி உள்ளார்.
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating