பழனி அருகே கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண் மீட்பு!!
பழனி தாலுகா காவலபட்டி வி.பி.புதூரை சேர்ந்தவர் துரைச்சாமி (வயது37). மினி வேன் டிரைவராக உள்ளார். இவருக்கும் மகுடீஸ்வரி (24) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் முத்துச்சாமி (25) திருமணம் ஆகவில்லை. இவர் அடிக்கடி மகுடீஸ்வரியுடன் பேசி பழனி வந்தார். இது நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது.
சம்பவத்தன்று துரைச்சாமி வீட்டில் இல்லாத நேரம் முத்துச்சாமி மகுடீஸ்வரியை அழைத்துக்கொண்டு மாயமானார்.
துரைச்சாமி விசாரித்து பார்த்ததில் மகுடீஸ்வரியை முத்துச்சாமி மதுரைக்கு அழைத்து சென்றது தெரிய வந்தது.
இது குறித்து தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் மதுரைக்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் பிடித்து பழனிக்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating