ஒட்டன்சத்திரத்தில் திருமண வீட்டில் கைவரிசை காட்டிய பெண் கைது!!
ஒட்டன்சத்திரம்– பழனி ரோட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள திப்பம்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (வயது31) என்பவர் குடும்பத்துடன் திருமணத்துக்கு வந்திருந்தார்.
விருந்து சாப்பிட்டு விட்டு வாசலில் மொய் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது இவரது பாக்கெட்டில் இருந்த ரூ.500 பணத்தை ஒரு பெண் எடுத்துக்கொண்டு காரில் புறப்பட சென்றார்.
உடனே மாரிமுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்தார். விசாரணையில் அவர் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் 8–வது வார்டை சேர்ந்த முருகன் மனைவி முனியம்மாள் (40) என தெரிய வந்தது.
அந்த பெண்ணை பிடித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் வந்த காரை பறிமுதல் செய்து விசாரித்ததில் திருமண வீடுகளில் இதுபோல் டிப்டாப் உடை அணிந்து காரில் கலந்து கொள்வதும், பின்னர் அந்த வீடுகளில் கொள்ளையடிப்பதும் இவர் வாடிக்கையாக கொண்டிருந்தது தெரிய வந்தது.
Average Rating