ஆண்டிப்பட்டி அருகே கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கவுன்சிலர் கொலையா?

Read Time:2 Minute, 0 Second

48ba5ff0-21f6-4bad-9803-885b9ec7ad2b_S_secvpfஆண்டிப்பட்டி அருகில் உள்ள ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராஜா(வயது35). இவர் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்தார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு நண்பர்கள் சிலருடன் மதுகுடித்தார். நேற்று அதிகாலையில் தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து ராஜாவின் உறவினர்களுக்கு தெரியவரவே அவரது தாயார் சோலையம்மாள் தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவரது உடலை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

இதனிடையே போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் ராஜா தனது நண்பர்களான முத்தையா உள்பட 4 பேருடன் மது குடிக்க சென்றார். முத்தையா செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கும் ராஜாவின் மனைவி ராஜாத்திக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக ராஜாவை முத்தையா மற்றும் அவரது நண்பர்கள் அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கொலை செய்தார்களா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரித்தானிய அரச குடும்பத்தில் மருமகளாக இன்னொரு கமீலா?
Next post தனது மோசமான உடல் பாதிப்புக்களையும் மீறி கணக்காளராகவும் பேச்சாளராகவும் மாறி சாதனை!!