ஆம்பூர் அருகே இளம்பெண்ணை பலாத்காரம் செய்த டிரைவர் கைது!!
பேரணாம்பட்டு அடுத்த சாத்கர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரோகினி (வயது 22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவரை திருப்பத்தூரில் உள்ள தனியார் ஆசிரமத்தில் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஆம்பூர் அடுத்த மிட்டாலம் பகுதியில் உள்ள ரோகினியின் பாட்டி வீட்டில் 3 மாதம் ரோகினியை அவரது பெற்றோர் தங்க வைத்தனர்.
அப்போது மிட்டாலம் ராலபுத்தூர் கிராமம் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி மகன் முரளி (20). டிராக்டர் டிரைவர், ரோகினியை ஏமாற்றி பலமுறை பலாத்காரம் செய்தார்.
இதனால் கர்ப்பமானார். பின்னர் மீண்டும் சிறிது காலம் தனியார் ஆசிரமத்தில் ரோகிணி தங்கியிருந்தார். இதற்கிடையில் கர்ப்பிணியாக இருந்த ரோகிணிக்கு கடந்த 13–ந் தேதி திருப்பத்தூர் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரோகிணியின் பெற்றோர் தனது மகளின் நிலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தபோது, ரோகினியை ஏமாற்றியது முரளி என தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் ரோகினியின் பெற்றோர் சென்று தட்டிக் கேட்டனர். அதற்கு முரளி, இருவரையும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர்கள் ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் வைலட் வழக்கு பதிவு செய்து முரளி மற்றும் அவரது தாய் சாவித்ரி ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ரவியை தேடி வருகிறார்.
Average Rating