விபச்சார வழக்கில் சிக்கிய நடிகைக்கு குவியும் ஆதரவு!!

Read Time:2 Minute, 11 Second

Untitled-12விபச்சார வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நடிகை ஸ்வேதா பாசுவுக்கு ஆதரவாக தேசிய விருது பெற்ற இயக்குனர் ஹன்சல் மேத்தா குரல் கொடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு வெளிவந்த ‘ஷாகித்’ என்ற ஹிந்திப் படத்தை இயக்கியதற்காக சிறந்த இயக்குனருக்கான விருதைப் பெற்றவர் இவர்.

அவருடைய டுவிட்டர் தளத்தில் “ஸ்வேதாவின் புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்துங்கள். அவருடைய அந்த பணக்கார வாடிக்கையாளர்களையும், அவருடைய தரகரின் புகைப்படங்களையும் வெளியிடுங்கள். என்னுடைய அடுத்த படத்தில் ஸ்வேதாவுக்கு நடிக்க ஒரு வாய்ப்புக் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அவர் ‘மாக்தீ’ படத்தில் மிகவும் நன்றாக நடித்த நடிகை,” என்று கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்ல, ஒரு சில இந்தி நட்சத்திரங்களும் ஸ்வேதாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியிருக்கிறார்கள். “ஒரு பெண் விபச்சாரத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். ஆனால் அவருடைய பணக்கார வாடிக்கையாளர்களைப் பற்றி ஏன் வெளியிடவில்லை,” என நடிகை அதிதி கூறியிருக்கிறார்.

உபேன் என்ற நடிகர் கூறியிருப்பதாவது, “ஸ்வேதாவின் நிலமையைப் பார்த்து மனம் உடைந்துவிட்டேன். அவர் சின்னப் பெண்ணாக இருந்த போது சந்தித்துள்ளேன். சிறந்த நடிகை, அவர் மீண்டும் வந்து நடிப்பில் சாதிப்பார் என நம்புகிறேன்,” என்று கூறியிருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்பு – நயன் ஜோடியாகப் பார்த்த காவியம்!
Next post பெண்ணிடம் முகவரி கேட்பதாக நடித்து ரூ.3 லட்சம் தங்க நகைகள் கொள்ளை!!