நான் 2 நாட்கள் கற்பழிக்கப்பட்டேன்: கோவை கோர்ட்டில் 11 வயது சிறுமி சாட்சியம்!!

Read Time:5 Minute, 13 Second

0a5039c3-dcdf-48b1-82d0-e2290b860d20_S_secvpfபொள்ளாச்சியில் தனியார் காப்பகத்தில் தங்கி இருந்த 2 பள்ளி மாணவிகள் கற்பழிக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் 11–ந் தேதி இரவு விடுதியில் இருந்து கடத்தப்பட்ட அந்த 11 வயது, 9 வயது சிறுமிகள் கத்திமுனையில் கற்பழிக்கப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக வால்பாறையை சேர்ந்த குரு என்கிற வீராசாமி (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். தற்போது வீராசாமி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாணவிகள் கற்பழிக்கப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோவை மகளிர் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் 27–ந் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சிறுமிகளின் சாட்சியம் பதிவு செய்யப்படுவதாக இருந்தது. இதற்காக சிறுமிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் 11 வயது சிறுமி மிகவும் அழுதபடி சோகத்தில் இருந்தார். எனவே அன்றைய தினம் சாட்சியம் பதிவு செய்யப்பட முடியாமல் போனது. எனவே விசாரணை 5–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

அதன்படி நேற்று இந்த வழக்கில 11 வயது சிறுமியின் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. இதற்காக வீராசாமி கோவை மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். கோவையில் உள்ள காப்பகத்தில் தங்கி இருந்த 11 வயது சிறுமியும் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.

கோர்ட்டுக்கு வந்திருந்த 11 வயது சிறுமி கடந்த முறை போன்று இல்லாமல் புது தெம்புடன் காணப்பட்டார். கோர்ட்டு வளாகத்தில் நின்ற அவரது முகத்தில் எந்த பயமும் தெரியவில்லை. தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் அவர் தயங்கவில்லை.

கற்பழிப்பு சம்பவத்தை பற்றி யாரும் கேட்கத்தொடங்கினால் மட்டுமே அவரது முகத்தில் தயக்கம் தெரிந்தது. இருந்த போதிலும் அந்த தருணத்தை அவர் சமாளித்தபடி நின்றார்.

மகளிர் கோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது 11 வயது சிறுமி, அரசு வக்கீல் சரோஜினி, எதிர்தரப்பு வக்கீல் மயில்வாகணன், 2 கோர்ட்டு ஊழியர்கள், சிறுமியின் உறவினர் ஆகியோர் மட்டும் கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கோர்ட்டு அறையின் கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டன. பின்னர் நடந்த சம்பவம் குறித்து 11 வயது சிறுமியிடம் நீதிபதி கேட்டார். அப்போது அந்த சிறுமி கூறியதாவது:–

எனக்கு குரு அண்ணாவை (வீராசாமி) தெரியும். நான் தங்கி இருந்த காப்பகத்துக்கு வருவார். கடந்த ஜூன் மாதம் 9–ந் தேதி இரவு நான் காப்பகத்தில் இருந்தேன். அப்போது அங்கு குரு அண்ணா வந்தார். என்னை தாக்கி கத்தி முனையில் மிரட்டிய அவர் அங்குள்ள இருட்டான இடத்துக்கு அழைத்து சென்றார்.

ஆள் நடமாட்டம் இல்லாத அங்கு அவர் என்னை கற்பழித்தார். 2 நாட்கள் கழித்து மீண்டும் வந்தார். என்னையும் 9 வயது சிறுமியையும் மிரட்டி அதே இருட்டான இடத்துக்கு அழைத்து சென்று 2 பேரையும் கற்பழித்தார்.

இவ்வாறு சுமார் 30 நிமிடம் 11 வயது சிறுமி சாட்சியம் அளித்தார்.

இது பற்றி அரசு வக்கீல் சரோஜினி கூறும் போது, ‘‘சிறுமிக்கு வெளியில் பேசுவதற்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுத்து உள்ளோம். நாங்கள் உனக்கு உறுதுணையாக உன்னுடனே இருக்கிறோம் என கூறி உற்சாகப்படுத்தி உள்ளோம்’’ என்று தெரிவித்தார். வீராசாமியால் கற்பழிக்கப்பட்ட இன்னொரு சிறுமியான 9 வயது சிறுமியின் சாட்சியம் வருகிற 8–ந் தேதி கோர்ட்டில் பதிவு செய்யப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேறு பெண்ணுடன் சேர்ந்து கணவர் சித்ரவதை: மனைவி போலீசில் புகார்!!
Next post கள்ளிக்குடி அருகே பிளஸ்–1 மாணவி மாயம்: தந்தை புகார்!!