வீர மரணம் வேண்டும்! தீவிரவாதியை கரம்பிடித்த பெண் பெற்றோருக்குத் தகவல்!!

Read Time:3 Minute, 22 Second

400883001Untitled-2சிரியா மற்றும் ஈராக்கில் அரசுப் படைகளை எதிர்த்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்கள்.

ஐ.எஸ்.ஐ.எஸ். என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.

ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும்.

இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த இயக்கத்தில் சேருவதற்கென்றே பல வெளிநாட்டினர் ’உம்ரா’ செய்வதாக விசா பெற்று, ஈராக் மற்றும் சிரியாவுக்கு வந்து விடுவதாக கூறப்படுகின்றது.

அவ்வகையில், அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இந்த இயக்கத்தில் இணைந்து தீவிரவாதிகளாக மாறியுள்ளனர்.

இது தவிர, நூற்றுக்கணக்கான பெண்களும் ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து போரிட்டு வருவதாகவும் சர்வதேச உளவு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.

ஸ்காட்லாந்து நாட்ட்டில் உள்ள கிளாஸ்கோ நகரைச் சேர்ந்த அக்ஸா மஹ்மூத் என்ற 20 வயது பெண் அங்கு கதிர்வீச்சியல் துறை சார்ந்த மேற்படிப்பு படித்து வந்தார்.

இஸ்லாமிய தீவிரவாத கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட அக்ஸா, ஸ்காட்லாந்தி இருந்தபடியே தீவிரவாத வேலைக்கு இணையத்தின் மூலம் ஆள்சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், துருக்கி வழியாக சிரியாவின் அலெப்போ நகருக்கு சென்று, ஐ.எஸ். குழுவைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துக் கொண்டு, அவர் பெண் தீவிரவாதியாக மாறிப்போன திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அலெப்போ நகரில் இருந்தபடி தனது பெற்றோருடன் செல்போன் மெஸேஜ்கள் மூலம் பேசிய அக்ஸா, நான் வீர மரணம் அடையவே விரும்புகிறேன். இறுதி தீர்ப்பு நாளின்போது உங்களை சந்தித்து, உங்கள் கரங்களை பிடித்து சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்வேன் என்று ஒரு குறுந்தகவலில் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரயிலில் சில்மிஷம் செய்த ஜோடிகளுக்கு நேர்ந்த கதி!!
Next post உ.பி.யில் சிறுமிகளுக்கு எதிரான கொடுமை: 9 மாதங்களில் 78 வழக்குகள் பதிவு!!