ரயிலில் சில்மிஷம் செய்த ஜோடிகளுக்கு நேர்ந்த கதி!!

Read Time:3 Minute, 18 Second

1094174157Untitled-1மதுரையில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு வந்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோட்டில் இருந்து வட மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்களும், 2 இளம்பெண்களும் சென்னை செல்வதற்காக ரயிலில் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஏறினர்.

ரயில் திருச்சியை கடந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் நள்ளிரவு 12.15 மணி அளவில் அரியலூர் ரயில் நிலையம் அருகே செல்லும் போது பி.1 பெட்டியில் (மூன்றடுக்கு குளிர்சாதன வசதி பெட்டி) அபாய சங்கிலியை பயணிகள் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

இதையடுத்து ரயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது பி.1 பெட்டியில் இருந்த வட மாநிலத்தை சேர்ந்த 2 ஜோடிகள் இருக்கையில் படுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும், இதனால் மற்றவர்கள் பயணம் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகவும், அதனால் அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தியதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து அரியலூர் ரயில் நிலையத்தில் வட இந்திய இளம்ஜோடிகளை ரயிலில் இருந்து இறக்கி ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். அவர்கள் 5 பேரும் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற பின் சென்னை திரும்புவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் ரயிலில் தாங்கள் சில்மிஷத்தில் எதுவும் ஈடுபடவில்லை என தெரிவித்தனர். ஆனால் சக பயணிகள் இதனை மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் ஏறினால் ரயிலை புறப்படவிட மாட்டோம் என பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் அந்த 5 பேரும் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய நிலைய அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்பு படையினரும் அனுமதிக்கவில்லை.

அதன்பின் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 20 நிமிட தாமதத்திற்கு பிறகு சென்னை புறப்பட்டு சென்றது. அதில் சக பயணிகள் ரயிலில் ஏறி பயணம் செய்தனர்.

ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்ட 5 பேரும் அரியலூரில் இருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐஸ் பாக்கெட் சவால் – இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்?
Next post வீர மரணம் வேண்டும்! தீவிரவாதியை கரம்பிடித்த பெண் பெற்றோருக்குத் தகவல்!!