உ.பி.யில் சிறுமிகளுக்கு எதிரான கொடுமை: 9 மாதங்களில் 78 வழக்குகள் பதிவு!!
உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்முறை சம்பவம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த 9 மாதங்களில் மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள காவலை் நிலையங்களில் சிறுமிகளுக்கு எதிராக நடந்த கொடுமைகள் குறித்து 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி முதல் இந்த வருடம் ஆகஸ்ட் 20-ந்தேதி வரை மேற்கு உத்தர பிரதேசத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம் 2012 மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
78 வழக்குகளில் 49 வழக்குகள் கற்பழிப்பு வழக்குகள். மற்றவை டீவ் டீசிங் மற்றும் கடத்தல் வழக்குகளாகும். சிறப்பு நீதிமன்ற கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதி மன்யாங்க் சவுகான் இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்து வருகிறார்.
Average Rating