ராஜாக்கமங்கலத்தில் தம்பி இறந்த துக்கத்தில் அண்ணன் தற்கொலை!!
Read Time:1 Minute, 2 Second
ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் திக்குறிச்சியை சேர்ந்தவர் சங்கர குமார் (வயது 26). கூலி தொழிலாளி. இவரது தம்பி கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு பரீட்சையில் குறைவான மார்க் வாங்கியதால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தம்பியிடம் நண்பன் போல சங்கரகுமார் பழகி வந்ததால் அவரது பிரிவை அவரால் தாங்க முடியாமல் தவித்தார்.
குடும்பத்தினர் ஆறுதல் கூறியும் சங்கரகுமார் கவலையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் பெற்றோர் வெளியே சென்றிருந்த போது நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு சங்கரகுமார் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Average Rating