ஒரே நாளில் 3 முறை கற்பழிக்கப்பட்டேன்: கோர்ட்டில் 9 வயது சிறுமி சாட்சியம்!!

Read Time:5 Minute, 28 Second

2c87b6a3-c046-481d-b7f1-9139b7060d5d_S_secvpfகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தனியார் காப்பகத்தில் தங்கி படித்த 2 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டனர். 9, 11 வயது நிரம்பிய அந்த 2 சிறுமிகளும் கடந்த ஜூன் மாதம் 11–ந் தேதி இரவு கத்தி முனையில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக வால்பாறையை சேர்ந்த வீராசாமி (வயது 23) என்பவனை போலீசார் கைது செய்தனர். தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வீராசாமி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

சிறுமிகள் கற்பழிக்கப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு கோவை மகளிர் கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் ஒரு பகுதியாக 2 மாணவிகளின் சாட்சியமும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 5–ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் 11 வயது சிறுமி ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது வீராசாமி தன்னை ஜூன் 9–ந் தேதியும், 11–ந் தேதியும் கத்தி முனையில் மிரட்டி கற்பழித்ததாக சாட்சியம் அளித்தார்.

மற்றொரு சிறுமியான 9 வயது சிறுமி சாட்சியம் அளிப்பதற்காக நேற்று மகளிர் கோர்ட்டுக்கு வந்திருந்தார். கோவை கோர்ட்டில் இருந்து வீராசாமியும் அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

காலை 10.30 மணி அளவில் சாட்சியம் அளிப்பதற்காக 9 வயது சிறுமி கோர்ட்டு அறைக்குள் வரவழைக்கப்பட்டார். நீதிபதி சுப்பிரமணியன், அரசு வக்கீல் சரோஜினி, வீராசாமிக்காக ஆஜரான இலவச சட்ட உதவி மையத்தை சேர்ந்த வக்கீல் மயில் வாகனன், கோர்ட்டு ஊழியர்கள் 2 பேர் சிறுமிகளின் உறவினர்கள் 2 பேர் ஆகியோர் மட்டும் கோர்ட்டு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் உள்ளே சென்றதும் அந்த அறை பூட்டப்பட்டது. பின்னர் சிறுமி சாட்சியம் அளித்தார்.

கடந்த ஜூன் மாதம் 11–ந் தேதி இரவு தன்னை வீராசாமி அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மேல் பகுதிக்கு கடத்தி சென்றார். அங்கு தன்னை 3 முறை கற்பழித்ததாக அந்த சிறுமி சாட்சியம் அளித்தார்.

அங்கு நடந்த மேலும் சில சம்பவங்களையும் சிறுமி நீதிபதியிடம் கூறினார். அதைத் தொடர்ந்து வக்கீல் மயில் வாகனன் 11 வயது சிறுமியிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது வக்கீல் கேட்ட கேள்விகளுக்கு அந்த சிறுமி பதிலளித்தார். தன்னை கடந்த ஜூன் மாதம் 9–ந் தேதி வீராசாமி கற்பழித்ததாகவும், கற்பழிப்பு விவகாரத்தை வெளியில் சொன்னால் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி ஜூன் 11–ந் தேதி மீண்டும் கற்பழித்ததாகவும் தெரிவித்தார்.

9 வயது சிறுமியின் சாட்சியமும் 11 வயது சிறுமியிடம் நடந்த குறுக்கு விசாரணையும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 சிறுமிகளும் கோர்ட்டு அறையை விட்டு வெளியே வந்தனர்.

கற்பழிக்கப்பட்ட 2 மாணவிகளும் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரும், தங்கியிருந்த காப்பகத்தின் மானேஜருமான ராஜேந்திரனும் நேற்று கோர்ட்டில் ஆஜரானார்.

‘‘சிறுமிகள் மாயமானதும் மதுரையில் இருந்த எனக்கு வார்டன் மூலமாக தகவல் வந்தது. உடனே நான் மதுரையில் இருந்து பொள்ளாச்சிக்கு விரைந்து வந்தேன். வார்டன், ஊழியர்கள் உதவியுடன் மாணவிகளை தேடினோம். அப்போது அங்குள்ள கட்டிடத்தில் மாணவிகள் ரத்த காயங்களுடன் கிடந்தனர்’’ என்று கூறினார். பின்னர் அவரிடமும் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையை வருகிற புதன்கிழமைக்கு தள்ளி வைத்து நீதிபதி சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அன்றைய தினம் காப்பகத்தின் காவலாளியிடம் விசாரணை நடைபெறும் என தெரிகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 62 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடைபெற உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அம்பத்தூரில் மயக்க ஊசி போட்டு பெண்ணை கற்பழிக்க முயற்சி: டாக்டர் கைது!!
Next post சித்தார்த்துக்கு பைத்தியமாம் – சமந்தா பேச்சு!!