ஒரு தந்தை, இரு தாயைக் கொண்ட பெண்!!
சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது இன்று உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பெண்ணின் சினை முட்டைகளையும், ஆணின் உயிரணுக்களையும் ஒன்று சேர்த்து கருவை வளரச் செய்கிறார்கள்.
எனினும் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக 2 பெண்களின் சினை முட்டைகளை ஒன்றாக கலந்து அவற்றை ஆணின் உயிரணுக்களுடன் சேர்த்து கருவை உருவாக்கும் மருத்துவ தொழில்நுட்ப முறையும் பல நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முறையில் 30–க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆண்டுதோறும் பிறக்கின்றனவாம்.
ஆனால், இப்படி 3 பெற்றோர் இணைந்த குழந்தைகளை உருவாக்கும் முறைக்கு அமெரிக்கா கடந்த 2002–ம் ஆண்டு தடை விதித்தது. இங்கிலாந்து நாட்டிலும் இந்த தடை இருந்து வந்தது.
இப்போது ஒரு தந்தைக்கும், 2 தாய்க்கும் இடையே குழந்தை பிறப்பதை சட்டப்பூர்வமாக அனுமதிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்து இருக்கிறது. இது தொடர்பாக விரைவில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தி சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.
இதற்காக சில ஆண்டுகளுக்கு முன்பு 3 பெற்றோர் மூலம் பிறந்த பெண்ணான ஆலானா சாரினென் (படத்தில் உள்ளவர்) மற்றும் 16 இளம்பெண்களின் உடல் நலம் பற்றியும், இவர்களுக்கு மரபு வழியில் நோய்கள் எதுவும் பரவுகிறதா? என்பது பற்றியும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஓட்டெடுப்பு நிறைவேறுவதன் மூலம் 3 பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வ அனுமதியை அளிக்கும் முதல் நாடாக இங்கிலாந்து திகழும்.
Average Rating