மாநகர பஸ்சில் பயணம் செய்த போது பெண் போலீசின் மடியில் உட்கார்ந்த போதை ஆசாமி!!

Read Time:1 Minute, 57 Second

763fe588-85dd-4c10-9c05-2b0b8883b2f0_S_secvpfஎண்ணூர் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் நேற்று மாலை எண்ணூர் அத்திப்பட்டு புதுப்பாலம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டார்.

பின்னர் அங்கிருந்து பாரிமுனை செல்லும் மாநகர பஸ்சில் போலீஸ் நிலையம் செல்வதற்காக ஏறி இருக்கையில் அமர்ந்தார்.

காட்டுக்குப்பம் பஸ் நிறுத்தத்தில் நின்ற போது போதை ஆசாமி ஒருவர் தள்ளாடியபடியே பஸ்சில் ஏறினார். ஆண்கள் அமரும் பகுதியில் இருக்கைகள் காலியாக இருந்தும் நின்று பயணம் செய்தார்.

பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் பெண் போலீஸ்காரர் அமர்ந்து இருந்த இருக்கையின் அருகே உளறியபடி சென்ற அவர் திடீரென பெண் போலீசின் மடியில் அமர்ந்தார்.

அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கூச்சலிட்டார். உடனே மற்ற பயணிகள் போதை ஆசாமியை பஸ்சில் இருந்து கீழே இறக்கி தர்ம அடி கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அவரை எண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். முழு போதையில் இருந்த அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசி போலீசாரை கிறங்கடித்தார். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு போதை இறங்கிய பின்னரே அவரிடம் விசாரணையை தொடங்கினர்.

அவர் எண்ணூர் நெட்டுக்குப்பத்தை சேர்ந்த முரளி என்பது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தர்மபுரியில் நர்சிங் மாணவியை கடத்தியதாக வாலிபர் கைது!!
Next post பேஸ்புக் காதலனை நம்பி காதல் கணவரை கைவிட்ட இளம்பெண்!!