7 மாணவர்களை வல்லுறவு புரிந்த ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினருக்கு வலை வீச்சு!!
கல்விச் சுற்றுலா சென்ற 7 மாணவர்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் வனாத்தவில்லு பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வனாத்தவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
வனாத்தவில்லு – கரத்தீவு பிரதேச பாடசாலையின் ஆண் மாணவர்கள் 7 பேரே இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வனாத்தவில்லு – கரத்தீவு பகுதி முஸ்லிம் பாடசாலை ஒன்றின் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் கடந்த 2ஆம் திகதி கல்விச் சுற்றுலா சென்றுள்ளனர்.
மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை பகுதிகளுக்குச் சென்ற இந்த சுற்றுலாவில் 53 மாணவர்கள், 35 மாணவிகள், 5 ஆசிரியர்கள், 6 ஆசிரியைகள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மூவர் அங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் சார்பில் சென்றுள்ளார்.
வெலிகம – கப்பல்துறை பகுதியில் உள்ள பள்ளிவாசலில் 2ஆம் திகதி இரவு மாணவர்கள் தங்கியுள்ளனர். அதன்போது இரவில் 7 மாணவர்கள் மீது பிரதேச சபை உறுப்பினர் பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார்.
இது தொடர்பில் தகவல் அறிந்த ஒருவர் புத்தளம் வலய பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கூறியுள்ளார். பின்னர் வனாத்தவில்லு பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பிரதேச சபை உறுப்பினர் குற்றம் புரிந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை கைது செய்ய வனாத்தவில்லு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Average Rating