நண்பனின் காதலியை கத்தி முனையில் வல்லுறவு செய்த இலங்கையருக்கு டுபாயில் சிக்கல்!!

Read Time:1 Minute, 58 Second

350000104842197450nife3டுபாய் – ஜெபெல் அலி பகுதியில் நண்பரின் காதலியை கத்திமுனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவு செய்ததாக 23 வயதான இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சமையல் வேலை செய்யும் இலங்கையர் குறித்த பெண்ணின் அறைக்குள் நுழைந்து இவ்வாறு பாலியல் வல்லுறவு புரிந்துள்ளார்.

பாலியல், குற்ற அச்சுறுத்தல் மற்றும் அனுமதியின்றி மது நுகர்ந்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தி இலங்கையர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தான் அறைக்குள் இருந்த போது உள்ளே வந்த நபர் தன்னை பிடித்து உள்ளே தள்ளி கதவை மூடி கத்திமுனையில் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் நீதிமன்றில் கூறியுள்ளார்.

களுத்தில் கத்தியை வைத்து தன்னை உடலுறவுக்கு அழைத்ததாகவும் தான் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே பலாத்காரமாக தன்மீது வல்லுறவு புரிந்ததாக பெண் குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி அழைப்பொன்றை அடுத்து அறைக்குள் இருந்து தப்பிச் சென்ற பெண் காவலாளியிடம் தனக்கு நடந்ததை குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் அவர்கள் அதனை நம்பவில்லை. எனினும் சம்பவம் பதிவான சமயத்தில் சந்தேகநபர் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடத்தப்பட்ட கேஷானி கண்டுபிடிக்கப்பட்டார்!!
Next post 7 மாணவர்களை வல்லுறவு புரிந்த ஆளும் கட்சி பிரதேச சபை உறுப்பினருக்கு வலை வீச்சு!!