கடத்தப்பட்ட கேஷானி கண்டுபிடிக்கப்பட்டார்!!
Read Time:1 Minute, 15 Second
குருநாகல் – வெல்லவ பிரதேசத்தில் சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன கேஷானி பண்டார என்ற 4 வயது சிறுமி நெரியாவ பிரதேச வர்த்தக நிலையமொன்றுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மீட்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளவென அவரை பெற்றோரிடம் அழைத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 8ஆம் திகதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த கேஷானி இனந்தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இது குறித்து விசேட பொலிஸ் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating