கல்லூரி மாணவிகள் மீது அசீட் வீச்சு!!
Read Time:1 Minute, 6 Second
மதுரை திருமங்கலத்தில் இன்று கல்லூரி மாணவிகள் மீது மர்ம நபர் ஒருவர் ஆசிட் வீசி தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகளான மீனா, அங்காள ஈஸ்வரி ஆகியோர் இன்று பிற்பகல் கல்லூரி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவன், திடீரென அவர்களை வழிமறித்து, தான் கொண்டு வந்த அமிலத்தை அவர்கள் மீது ஊற்றி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இந்த தாக்குதலில் ஒரு மாணவியின் கண் பார்வை பாதிக்கப்பட்டது. மற்றொரு மாணவிக்கு உடலில் காயம் ஏற்பட்டது. மாணவிகள் இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating