வரதட்சணை கொண்டு வராத மனைவியை விஷம் வைத்துக் கொன்ற வக்கீல் கைது!!
மகாராஷ்ட்டிர மாநிலம், லகாட்கஞ்ச் பகுதியை சேர்ந்த சோனாலி (26) என்ற திருமணமான பெண் இரு தினங்களுக்கு முன்னர் விஷ பாதிப்பினால் நாக்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த பெண் இறந்து விடவே, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர் குடும்பத்தினர், தங்கள் மகளை விஷம் வைத்துக் கொன்று விட்டதாக உள்ளூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, அந்த பெண்ணின் பிரேதத்தை பார்த்த போலீசார், தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கிய அடையாளம் இருப்பதை கண்டனர். அவரை தாக்கி, வற்புறுத்தி விஷம் குடிக்க வைத்திருக்கக் கூடும் என சந்தேகித்த போலீசார், பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இறந்த பெண்ணின் கணவரான வக்கீல் தொழில் செய்யும் அமோல், அவரது தாயார் மற்றும் தம்பியை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating