கவர்ச்சிக்கு சமந்தா கூறும் புதுமையான காரணம்!!
‘மாஸ் ஹீரோவுடன் நடிக்கும்போது கவர்ச்சியாக நடிக்க தயங்க மாட்டேன் என்றார் சமந்தா.சேலை, சுடிதார் என்று அடக்க ஒடுக்கமாக நடித்துக்கொண்டிருந்த சமந்தா திடீரென்று ‘அஞ்சான் படத்தில் நீச்சல் உடையில் நடித்து ஷாக் கொடுத்தார்.
இதுபற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தாலும் எதற்கும் பதில் சொல்லாமல் இருந்துவந்தார். ‘நீச்சல் உடையில் நடித்தது ஏன்? என்பதற்கு தற்போது விளக்கம் அளித்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘நீச்சல் உடையில் நடித்ததற்கு சிலர் பாராட்டியும், சிலர் விமர்சித்தும் கருத்து தெரிவித்தனர்.
மாஸ் ஹீரோ படங்களில் நடிக்கும்போது ஹீரோயினாக நடிப்பவர் வேடம் எடுபடுவது கடினம். அதையும் கடந்து நிற்க வேண்டுமென்பதற்காகவே நீச்சல் உடை அணிந்து நடித்தேன். என்னை கேமராமேன் அழகாகவே காட்டி இருந்தார் என்றார்.
சமந்தா தற்போது விஜய்யுடன் ‘கத்தி, விக்ரமுடன் ‘பத்து எண்றதுக்குள்ள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்கவே சமந்தா தீவிர கவனம் செலுத்தி வருவதாலேயே தாரளமாக கவர்ச்சி காட்ட ஓ.கே. சொல்வதாக அவரது தரப்பு தெரிவிக்கிறது.
Average Rating