தேனி அருகே மைனர் பெண் திருமணத்தை தடுத்த அதிகாரிகள்!!
தேனி அருகே கன்னிசேர்வைபட்டியை சேர்ந்த சாமிபிள்ளை. இவரது 16வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ஜில்லாமணி(வயது21) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. எனவே இருவீட்டாரும் ஒன்றுகூடி பேசி திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.
அதன்படி கடந்த 11–ந்தேதி திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. இதுகுறித்து தேனியில் உள்ள குழந்தைகள் நலப்பிரிவு சமூகநலத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து சின்னமனூர் போலீசாருக்கும் மகளிர் முன்னேற்ற சங்கத்தினருக்கும், சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து கன்னிசேர்வைபட்டிக்கு சமூகநலத்துறை அதிகாரிகள் சென்றனர்.
அங்கு நடக்க இருந்த மைனர் பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதோடு பெற்றோரை அழைத்து பெண்ணுக்கு 18 வயது முடிந்தபின்புதான் திருமணம் செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினர்.
Average Rating