காதலியின் செல்ல நாயைக் கொன்று அவருக்கே விருந்து வைத்த காதலன்!!

Read Time:3 Minute, 4 Second

833156814Untitled-1அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் அவரது காதலியான இளம்பெண் ‘டேட்டிங்’குக்கு சென்றபோது, அந்நபர் அவளிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டார்.

அவளை அடித்து, உதைத்து, கடித்துக் குதறி காயப்படுத்தியதால் பீதியடைந்த அந்தப் பெண் ‘உன் சகவாசமே வேண்டாம்டா, சாமி’ என்று தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார்.

சில மாதங்களுக்குப் பின்னர், அந்தப் பெண்ணை கடந்த வாரம் சந்தித்த முன்னாள் காதலன், நடந்த தவறுக்கு மன்னித்து விடும்படியும், இனி அதுபோல் முரட்டுத்தனமாக நடந்துக் கொள்ள மாட்டேன் என்றும் உறுதியளித்துள்ளார்.

அவரது பேச்சை ஓரளவுக்கு நம்பி, மெல்ல அவருடன் பழக ஆரம்பித்த காதலிக்கு தனது வீட்டில் ’பெரிய விருந்து’ ஒன்றை அவர் அளித்துள்ளார். விருந்து முடிந்து வீட்டுக்குச் சென்ற சில நிமிடங்களுக்குள் காதலனின் செல்போனில் இருந்து அவளுக்கு ஒரு மெஸேஜ் வந்தது.

செல்போனை எடுத்து மெஸேஜைப் பார்த்த அவள் அதிர்ச்சியடைந்தாள். அவளது ’பொமேரியன்’ இன வளர்ப்பு நாயின் புகைப்படத்துடன் வந்த மெஸேஜில், ‘நீ இப்போது என்னோடு மூக்குப் பிடிக்க தின்று விட்டு வந்தாயே.., அது உனது செல்ல வளர்ப்பு நாயின் கறிதான்.

உணவு எப்படி சுவையாக இருந்ததா?’ என்று கேள்வி எழுப்பிய அந்நபர், ‘உன் வீட்டு வாசல் கதவருகே போய்ப் பார். உன் நாயின் கால்கள் கிடக்கும். எடுத்து சூப் வைத்து சாப்பிட்டு உடம்பையும், மனதையும் தேற்றிக் கொள் என்று குறும்பும் செய்துள்ளார்.

பதறியடித்து, வாசலுக்கு ஓடிவந்து பார்த்தபோது, அங்கே தனது செல்ல வளர்ப்பு நாயின் கால்கள் கிடப்பதைக் கண்டு கொதித்துப் போன அந்தப் பெண், இச்சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, அவளது முன்னாள் காதலனின் வீட்டுக்கு சென்று பொலிசார் விசாரித்தபோது, நான் நாயைக் கொல்லவும் இல்லை, நாய்க்கறி விருந்து வைக்கவும் இல்லை என்று அவர் மறுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபச்சார வழக்கில் சிக்கிய நடிகையின் பெற்றோரின் கோரிக்கை!!
Next post பள்ளியில் மாணவர்களை மது அருந்த வைத்த ஆசிரியர்கள்: ஜார்கண்டில் பரபரப்பு சம்பவம்!!