எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் பெண் அதிகாரியை மயக்கி நகை கொள்ளை!!
Read Time:58 Second
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் அதிகாரியாக இருப்பவர் வெண்ணிலா (வயது53). இன்று காலை 11.30 மணிக்கு ஆஸ்பத்திரி வளாகத்தில் வைத்து கைகுழந்தையுடன் வந்த பெண் ஒருவர் ஒரு துணிப்பையில் சுற்றிய நகைகளை திறந்து காட்டி உள்ளார். இதனை வைத்துக் கொண்டு எனக்கு பணம் கொடுங்கள். நானும் எனது குழந்தையும் சாப்பிட்டு 2 நாட்கள் ஆகிறது என்றார்.
இதையடுத்து அதிகாரி வெண்ணிலா மயக்கமானார். கண் விழித்து பார்த்தபோது அவர் அணிந்திருந்த வளையல், செயின் உள்ளிட்ட நகைகளை காணவில்லை. அந்த பெண் அதிகாரியை மயக்கி கொள்ளையடித்தது தெரிய வந்தது.
Average Rating