தாயின் கள்ளக் காதலனை அடித்துக் கொன்ற வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!!
டெல்லிக்கு உட்பட்ட பட்லி கால்வாய் பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு கோணிப்பையில் கட்டிப் போடப்பட்டிருந்த ஒரு ஆண் பிணத்தை கண்டெடுத்த போலீசார், இந்த படுகொலை தொடர்பாக விசாரித்து வந்தனர்.
அப்போது, பிணமாக கிடந்தது தனது கணவர் என்று உரிமை கொண்டாடிய ஒரு பெண், கொல்லப்பட்ட அனில் குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து, போலீசார் நடத்திய விசாரணையின்போது, ‘நானும் குமாரும் தனிமையில் இருந்ததை பார்த்துவிட்ட எனது மகன் நவீன்(23), ஆத்திரப்பட்டு குமாரை அடித்துக் கொன்று விட்டான்.
நானும், நவீனும் சேர்ந்து குமாரின் பிணத்தை கோணிப்பைக்குள் திணித்து, கால்வாயில் வீசி விட்டோம்’ என்று அவர் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, அந்தப் பெண்ணையும், நவீனையும் கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் குற்றவாளி தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர், ’இது திட்டமிட்ட கொலை அல்ல. தனது தாயுடன் இன்னொரு ஆடவரை பார்க்கக் கூடாத நிலையில் பார்த்த ஆத்திரத்தின் விளைவாக உணர்ச்சிவசப்பட்டு அந்த வாலிபர் இந்த தவறை செய்து விட்டார்’ என்ற வாதத்தை அரசு தரப்பு வழக்கறிஞரும் ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டார்.
இதனையடுத்து, குற்றவாளி நவீனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், இந்த கொலையை மறைக்க அவருக்கு உடந்தையாக இருந்த தாயாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கி டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Average Rating