தாயின் கள்ளக் காதலனை அடித்துக் கொன்ற வாலிபருக்கு 10 ஆண்டு சிறை!!

Read Time:2 Minute, 27 Second

5b51b544-4dfa-479b-bdfd-9dff8e26e72a_S_secvpfடெல்லிக்கு உட்பட்ட பட்லி கால்வாய் பகுதியில் கடந்த 2009-ம் ஆண்டு கோணிப்பையில் கட்டிப் போடப்பட்டிருந்த ஒரு ஆண் பிணத்தை கண்டெடுத்த போலீசார், இந்த படுகொலை தொடர்பாக விசாரித்து வந்தனர்.

அப்போது, பிணமாக கிடந்தது தனது கணவர் என்று உரிமை கொண்டாடிய ஒரு பெண், கொல்லப்பட்ட அனில் குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த இன்னொரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

அந்தப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து, போலீசார் நடத்திய விசாரணையின்போது, ‘நானும் குமாரும் தனிமையில் இருந்ததை பார்த்துவிட்ட எனது மகன் நவீன்(23), ஆத்திரப்பட்டு குமாரை அடித்துக் கொன்று விட்டான்.

நானும், நவீனும் சேர்ந்து குமாரின் பிணத்தை கோணிப்பைக்குள் திணித்து, கால்வாயில் வீசி விட்டோம்’ என்று அவர் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, அந்தப் பெண்ணையும், நவீனையும் கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை வழக்கில் குற்றவாளி தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர், ’இது திட்டமிட்ட கொலை அல்ல. தனது தாயுடன் இன்னொரு ஆடவரை பார்க்கக் கூடாத நிலையில் பார்த்த ஆத்திரத்தின் விளைவாக உணர்ச்சிவசப்பட்டு அந்த வாலிபர் இந்த தவறை செய்து விட்டார்’ என்ற வாதத்தை அரசு தரப்பு வழக்கறிஞரும் ஓரளவுக்கு ஏற்றுக் கொண்டார்.

இதனையடுத்து, குற்றவாளி நவீனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், இந்த கொலையை மறைக்க அவருக்கு உடந்தையாக இருந்த தாயாருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கி டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நித்யானந்தாவுக்கு நடத்தப்பட்ட ஆண்மை பரிசோதனை அறிக்கை சிஐடி போலீசிடம் ஒப்படைப்பு!!
Next post நாங்குநேரி அருகே பள்ளி வகுப்பறையில் மாணவியிடம் சில்மிஷம்: தலைமை ஆசிரியர் கைது!!