மாணவி கற்பழிப்பு வழக்கு: பால் வியாபாரியை பிடிக்க தனிப்படை கேரளா விரைந்தது!!
கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த பிளஸ்–1 மாணவி அவரது காதலன் அஜிஸ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பால் வியாபாரி ஜோஸ் ஆகியோரால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் கர்ப்பமடைந்த மாணவிக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும், சேயும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 மாதத்திலேயே குழந்தை பிறந்துள்ளதால் இன்குபேட்டர் கருவியில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மாணவியை காதல் வலையில் வீழ்த்தி பலாத்காரம் செய்த அஜிஸ் வெளிநாடு தப்பி ஓடி விட்டார். அவரை திரும்ப வரவழைக்குமாறும், இல்லையென்றால் தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து அஜிஸ் கைது செய்யப்படுவார் என்றும் போலீசார் அவரது குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் அஜிஸ் ஊர் திரும்புவார் என தெரிகிறது.
இதற்கிடையே, மாணவியை கற்பழித்த பால் வியாபாரி ஜோஸ் கேரளாவில் தலைமறைவாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
அவர் கைது செய்யப்படும் போது இந்த வழக்கில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.
இதுஒருபுறமிருக்க, மாணவிக்கு பிறந்த குழந்தையின் தந்தை யார்? என்பதை உறுதி செய்வதற்காக டி.என்.ஏ. பரி சோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக முறைப்படி கோர்ட்டு அனுமதி பெற வேண்டும் என்பதால் இன்று குழித்துறை கோர்ட்டில் அதற்கான மனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.
கோர்ட்டு அனுமதி கிடைத்ததும் மாணவி மற்றும் அவரது குழந்தையின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Average Rating