மதுரையில் வெவ்வேறு சம்பவங்கள்: பள்ளி ஆசிரியை-மாணவி கடத்தல்!!

Read Time:2 Minute, 12 Second

a1c1e562-cd72-44ea-9075-d042ccf6b955_S_secvpfமதுரை அருகே உள்ள வாலாந்தூரைச் சேர்ந்தவர் ஜோதிமாணிக்கம். இவரது மகள் நித்யா (வயது21). இவர் 108 ஆம்புலன்சில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து இவர் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் பிரபாகரன் (24) மோட்டார் சைக்கிளில் வந்தார். அவர் நித்யாவை கடத்தி சென்று விட்டதாக வாலாந்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை நிலையூரைச் சேர்ந்த பிளஸ்–2 மாணவி ஒருவர் வீட்டில் இருந்தபோது வரிச்சியூரைச்சேர்ந்த கண்ணன் என்பவர் கடத்தி சென்று விட்டதாக கூறப்படு கிறது.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருநகர் போலீசில் புகார் செய்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

தனியாமங்கலத்தை சேர்ந்தவர் பானுபிரியா (23). இவர் கீழவளவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவர் பணியில் இருந்த போது எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஜெகநாதன் வந்து தலைமை ஆசிரியரிடம் சொல்லி அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மேலும் பானுபிரியாவின் தந்தை பெரியகருப்பனை செல்போனில் தொடர்பு கொண்டு இதுகுறித்து ஆசிரியர் ஜெகநாதன் தெரி வித்ததாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியை பானுபிரியாவை தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அன்று விலைமாதுவானேன்.. இன்று முடியாது…!!
Next post மண்டேலா நகரில் காதல் ஜோடியை மிரட்டி செல்போன் பறிப்பு: 3 பேர் கைது!!