ஜவுளிக்கடையில் 9 சேலை திருடிய பெண் உள்பட 2 பேர் கைது!!

Read Time:1 Minute, 10 Second

1876645073Untitled-1தியாகராயநகர் உஸ்மான் சாலையில் பிரபல ஜவுளிக் கடை இருக்கிறது. இந்த கடையில் ஒரு ஆணும், பெண்ணும் துணி எடுத்தனர். அவர்கள் ஒரு சேலைக்கு பில் போட்டு விட்டு கடையில் இருந்து வெளியே செல்ல முயன்றனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த கடையின் காவலாளிகள் அவர்களது பையை சோதனை செய்தனர். உள்ளே 9 சேலைகள் இருந்தது. அதற்குரிய பில் இல்லை. அவர்கள் 9 சேலைகளையும் திருடி இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து கடையின் மக்கள் தொடர்பாளர் சங்கர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர்களிடம் விசாரணை செய்தனர். அவர்கள் முரளி மற்றும் முத்துப்பாண்டியம்மாள் என்று தெரியவந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேறு கடையில் கைவரிசை காட்டினார்களா? என்று விசாரித்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாலிபர் மானபங்கத்தால் அவமானம்: கல்லூரி மாணவி தற்கொலை!!
Next post அக்ஷராவின் காதல் முறிந்தது!!