10 நிமிட இடைவெளியில் ஐந்து குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!!

Read Time:1 Minute, 47 Second

Five-newbornமணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டத்திற்குட்பட்ட தங்க சமுக்கோல் கிராமத்தில் வசித்து வருபவர் 35 வயதான கீதா. நான்கு குழந்தைகளுக்கு தாயான அவர் மீண்டும் கர்ப்பமடைந்தார்.

கர்ப்பமடைந்த 28 வார காலத்திற்கு பின் நேற்று அப்பெண்ணுக்கு இடுப்பில் கடுமையான வலி ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள பிராந்திய அறிவியல் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ஒன்றன் பின் ஒன்றாக நான்கு அழகான பெண் குழந்தைகளையும், ஒரு அழகான ஆண் குழந்தையையும் பத்து நிமிட இடைவெளியில் கீதா பெற்றெடுத்தார்.

இதில் ஒரு பெண் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டது. முதலில் பிறந்த பெண் குழந்தையும் மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ள நிலையில் 800 கிராம் மற்றும் 900 கிராம் எடை மேலும் இரு பெண் குழந்தைகள் அவரச சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர்.

தாய் கீதா நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாக கூறிய மருத்துவர் ரன்பீர், குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post களைகட்டும் எமி – த்ரிஷா உறவு…!!
Next post வேலூர் சத்துவாச்சாரியில் 31 கிலோ மிளகாய்பொடி கரைசலில் குளித்த சாமியார்!!