மனைவியுடன் தகராறு: தொழிலாளி தற்கொலை!!
தென்தாமரைகுளம் அருகே உள்ள பூஜைப்புரை விளையை சேர்ந்தவர் ஆனந்தகுமார்(வயது 39). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆனந்தகுமார் சமீப காலமாக ஒழுங்காக வேலைக்கு செல்வது கிடையாதாம். மாறாக தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். வீட்டு செலவுக்கும் பணம் கொடுக்காததால் இவரது மனைவி சாந்தி அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். இது ஆனந்தகுமாருக்கு பிடிக்கவில்லை.
இதுகுறித்து அவர் ‘நீ வேலைக்கு செல்ல வேண்டாம்’ என கூறினாராம். அப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஆனந்தகுமார் நேற்று மாலை விஷம் குடித்த நிலையில் வீட்டருகே மயங்கிக் கிடந்தார். இதைக்கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச் சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்து போனார். இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின்பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். சப்–இன்ஸ்பெக்டர் கோலப்பன் விசாரணை நடத்தி வருகின்றார்.
Average Rating