செம்பட்டி அருகே 3 வயது மகளுடன் தாய் மாயம்!!
செம்பட்டி அருகே 3 வயது குழந்தையுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்ற இளம்பெண் மாயமானார். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டி பாளையங்கோட்டை மேற்குதெருவை சேர்ந்தவர் பெரியமுனியாண்டி. இவரது மகன் மீனாட்சிசுந்தரம்(வயது27). அவரது மனைவி பிரியா(24). 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு 3 வயதில் பெண்குழந்தை உள்ளது. கடந்த 12–ந்தேதி பிரியா குழந்தையுடன் சோழவந்தானில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதாக கணவரிடம் கூறினார். அதற்கு மீனாட்சிசுந்தரம் சம்மதம் தெரிவித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
இதையடுத்து பிரியா குழந்தையுடன் பஸ் ஏறுவதற்காக செம்பட்டி வந்தார். அங்கிருந்து அவர் குழந்தையுடன் திடீரென மாயமானார். மீனாட்சிசுந்தரம் மாமியார் வீட்டிற்கு போன் செய்து கேட்டபோதுதான் பிரியா அங்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உறவினர் வீடுகளில் தேடினார். பக்கத்து ஊர்களிலும் அலைந்து தேடினார். எங்கும் அவரை காணவில்லை.
பிரியாவை குழந்தையுடன் யாராவது கடத்திச்சென்றார்களா? அல்லது குடும்பபிரச்சினை காரணமாக எங்காவது சென்றுவிட்டாரா? என்று தெரியவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் செம்பட்டி போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating