ஒரே இரவில் 25 ஆண்களுடன் உறவுகொண்டு கனேடிய நகரை சர்ச்சைக்குள்ளாக்கிய மொடல்!!
கனடாவைச் சேர்ந்த மொடல் ஒருவர் ஒரே இரவில் 25 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 22 வயதான ஸோ ஸீப்ரா எனும் இந்த யுவதி கனடாவின் கியூபெக் மாநிலத்தை சேர்ந்தவர். மொடலாக பணியாற்றிய அவர் பின்னர் ஆபாசப்படங்களிலும் தோன்றினார்.
கடந்த மாதம் அவர் நிதி திரட்டுவதற்காக தொடர்ச்சியாக 25 ஆண்களுடன் பாலியல் உறவில் ஈடுபடப்போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இக்காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆபாசப்படத் தயாரிப்பு நிறுவனமொன்று இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
கனடாவின் கெட்டினோ நகரில் செப்டெம்பர் 5 ஆம் திகதி இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணிவரை இந்த விபரீத நிகழ்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் பணத்தை தனது மார்பகங்களை அழகுபடுத்துவதற்கான சத்திரசிகிச்சைக்கு பயன்படுத்தப் போவதாக ஸோ ஸீப்ரா கூறினார்.
இத்திட்டத்துக்கு நகர மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து ஸோ ஸிப்ரா குழுவின் விபரீத நடவடிக்கையை தடுப்பதற்கு நகர அதிகாரிகளும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளும் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டனர். பல விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.
நிர்வாண உடல் தொடர்பான எந்த வர்த்தக நடவடிக்கையும் இதற்கென அங்கீகரிக்கப்பட்ட வலயமொன்றிலேயே நடத்தப்பட முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், குடியிருப்புப் பகுதியொன்றில் அமைந்துள்ள போதிலும் துகிலுரி நடன நிகழ்வுகளை நடத்தவும் ஆபாச பாலியல் படங்களைத் தயாரிக்கவும் தான் அனுமதிபெற்றுள்ளதாக விடுதியொன்று தெரிவித்தது.
அதேவேளை பாலியல் படப்பிடிப்பும் தொடர்ச்சியான பாலியல் நடவடிக்கை அரங்கேற்றமும் ஒரே மாதிரியான விடயமல்ல என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், நகர மேயர், பொலிஸார் ஏனைய அதிகாரிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் கடந்த 5 ஆம் திகதி இரவு தனது திட்டத்தை ஸோ ஸீப்ரா நிறைவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நான் எனது இலக்கை அடைந்துவிட்டேன். இப்போது என்னால் அழகுபடுத்தலுக்கான சத்திரசிகிச்சைகளை செய்துகொள்ள முடியும்’ என ஸோ ஸீப்ரா கூறியுள்ளார். இந்நிலையில் மொடல் ஸோ ஸீப்பராவுக்கும் அவரின் குழுவினருக்கு எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating