சொத்து பிரச்சினையில் மோதல்: தொழிலாளியின் முதல் மனைவிக்கு அரிவாள் வெட்டு!!
Read Time:1 Minute, 18 Second
பாளை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த மடத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆபிரகாம். தொழிலாளி. இவருக்கு முத்தம்மாள்(55), வேலம்மாள்( 55) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். சமீபத்தில் ஆபிரகாம் இறந்துவிட்டார்.
சாகும் தருவாயில் தனது சொத்துக்களை அவர் முதல் மனைவி முத்தம்மாளுக்கு எழுதி வைத்து விட்டாராம். இந்த நிலையில் 2வது மனைவி வேலம்மாள் மற்றும் அவரது மகள் செல்வி ஆகியோர் தங்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு எனவும், தங்களுக்கு உரிய பங்கை தருமாறும் முத்தம்மாளிடம் கேட்டனர்.
அப்போது அவர்களுக் கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேலம்மாள் மற்றும் செல்வி ஆகியோர் சேர்ந்து முத்தம்மாளை அரிவாளால் வெட்டியதாக தெரிகிறது. இதுபற்றி முத்தம்மாள் கொடுத்த புகாரின்பேரில் சீவலப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating