4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது!!
Read Time:1 Minute, 18 Second
போளூரை அடுத்த எலத்தூரை சேர்ந்தவர் விஜயன் என்பவருடைய மகன் ரமேஷ் (வயது30). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
கடந்த மாதம் 4–ந் தேதி கடலாடி கிராமத்தில் 4 வயது சிறுமியை ரமேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தார்.
கைது செய்யப்பட்ட ரமேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க போளூர் துணை சூப்பிரண்டு கணேசன், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசிக்கு பரிந்துரை செய்தார். அவர் அதை கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.
இதனை ஏற்று ரமேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஞானசேகரன் உத்தரவிட்டார். இதனையடுத்து ரமேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Average Rating