4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்: லாரி டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது!!

Read Time:1 Minute, 18 Second

33072249-f7eb-467a-b56d-419a5ea0a6b3_S_secvpfபோளூரை அடுத்த எலத்தூரை சேர்ந்தவர் விஜயன் என்பவருடைய மகன் ரமேஷ் (வயது30). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
கடந்த மாதம் 4–ந் தேதி கடலாடி கிராமத்தில் 4 வயது சிறுமியை ரமேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது போளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தார்.

கைது செய்யப்பட்ட ரமேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க போளூர் துணை சூப்பிரண்டு கணேசன், போலீஸ் சூப்பிரண்டு முத்தரசிக்கு பரிந்துரை செய்தார். அவர் அதை கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.

இதனை ஏற்று ரமேசை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஞானசேகரன் உத்தரவிட்டார். இதனையடுத்து ரமேஷ் குண்டர் தடுப்பு சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாயையும் மகளையும் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது!!
Next post கணவனை தேடி விருத்தாசலம் வந்த இளம்பெண் கடத்தல்: உறவினர்கள் மீது போலீசில் புகார்!!