பலூன் மூலம் விண்வெளிக்கு பயணம்!!
பூமிக்கு மேல் பலூன் மூலம் விண்வெளிக்கு பயண திட்டத்தை தொடங்க சீன நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பூமிக்கு மேல் விண்வெளியில் பறக்க ராக்கெட் மற்றும் விண்கலம் பயன்படுத்தப்படுகிறது. அதை தவிர்த்து பலூன் மூலம் பயணம் செய்யும் திட்டத்தை சீன நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
அதற்காக அதி தொழில்நுட்பத்துடன் கூடிய பலூன் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஹீலியம் கிளாஸ் நிரப்பபட்டு அதன் மூலம் விண்ணில் பறக்கும் திறன் படைத்தது.
இந்த பலூன் மூலம் பூமிக்கு மேலே சுமார் 40 கி.மீட்டர் உயரத்தில் பறக்க முடியும். அதில் பறந்தபடியே பூமியின் வளைவு பகுதியை பார்த்து ரசிக்க முடியும்.
இந்த தகவலை ‘ஸ்பேஸ் விஷன்’ நிறுவன தலைவர் ஜியாங் பாங் தெரிவித்துள்ளார். பலூன் மூலம் விண்வெளிக்கு செல்ல தலா ரூ.50 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கான விரிவான திட்டம் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது. மேலும் பலூன் சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு (2015) மத்தியில் நடைபெறும்.
Average Rating