சாதாரண கைதிகளை போலவே ஜெயலலிதா நடத்தப்படுகிறார்!!!

Read Time:1 Minute, 57 Second

366892771Jayalalithaபரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு வி.ஜ.பி. சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மற்ற சாதாரண கைதிகளை போலவே அவர் நடத்தப்படுகிறார் என்றும் சிறை உயர் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறைத்துறை அதிகாரி ஜெய்சிம்ஹா கூறியதாவது:-

ஜெயலலிதாவுக்கு வி.ஐ.பி. சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை. பரப்பன அக்ரஹாரா சிறையில் மற்ற சாதாரண கைதிகள் எப்படி நடத்தப்படுகின்றனரோ அதைப்போலவே தான் ஜெயலலிதாவும் நடத்தப்படுகிறார். சிறையில் ஜெயலலிதா சிறையில் அதிகாரிகளிடம் மிகவும் அமைதியாகவே நடந்து கொண்டார். டாக்டர்களின் பரிந்துரைப்படி இரும்பு கட்டிலை தவிர வேறெந்த வசதியையும் அவர் வேண்டும் என்றும் கேட்கவில்லை.

சாதாரண கைதிகளுக்கு கூட தொலைக்காட்சி பெட்டி வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில் அதைக்கூட ஜெயலலிதா கேட்கவில்லை. சிறையில் அவருக்கு டாக்டர்கள் பரிந்துரைப்படி பிரவுண் பிரெட், பால், பிஸ்கட்டுகள், பழங்கள் மற்றும் சப்பாத்திகளே வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் அவர் விருப்பத்தின் பேரில் மட்டுமே. இதுதவிர படிப்பதற்கு நியூஸ்பேப்பர்களும் தரப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்களப்பில் பெண்ணின் தாலிக்கொடி, தங்கமாலை பறிப்பு!!
Next post மோடிக்கு ஒபாமா கொடுத்த பொக்கிஷம்!!