நடத்தையில் சந்தேகம்: மனைவியை கத்தியால் குத்திய கணவன்!!
Read Time:1 Minute, 16 Second
சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் 2–வது லேன் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். டெய்லர். இவரது மனைவி ஜூலியா மேரி (வயது 42). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர்களுக்கு திருமணமாகி 20 வருடம் ஆகிறது. 16 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர். ஜூலியாமேரியின் நடத்தையில் ரமேஷ் சந்தே கப்பட்டார். இதனால் கடந்த ஒரு வருடமாக கணவன்– மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இன்று அதிகாலை மீண்டும் கணவன்– மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த ரமேஷ் கத்தியால் ஜூலியாமேரியின் கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த ஜூலியாமேரி சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து சேத்துப்பட்டில் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தார்.
Average Rating