போதையால் வந்த வினை: மகளை கற்பழித்த தந்தை கைது!!
கோவை மாவட்டம் சூலூர் பள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமைய்யா (வயது 48). இவரது மனைவி மெய்யம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். 2–வது மகள் ரம்யா (வயது 20, பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று வீட்டில் ரம்யா தனியாக இருந்தார். அப்போது அங்கு ராமையா மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டில் தனியாக இருந்த மகள் ரம்யாவை கற்பழிக்க முயன்றார்.
அதிர்ச்சியடைந்த ரம்யா தந்தையிடம் இருந்து தனது கற்பை காப்பாற்றிக் கொள்ள போராடினார். ஆனால் ராமையாவின் பிடியிலிருந்து ரம்யாவால் தப்பிக்க முடியவில்லை.
தந்தையிடம் கெஞ்சி காலில் விழுந்து தன்னை விட்டுவிடும்படி கெஞ்சினார். ஆனால் அதற்கும் பலனில்லை. இறுதியில் ராமையா மகள் ரம்யாவை கற்பழித்தார். இதனால் அவமானமடைந்த ரம்யா தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமைய்யாவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating