5 வயது சிறுவனுக்கு எமனாக மாறிய தேங்காய்!!
Read Time:1 Minute, 2 Second
பொத்துஹெர – திரகம பிரதேசத்தில் தேங்காய் ஒன்று தலையில் விழுந்து 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
முன்பள்ளி மாணவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் மரத்தில் இருந்து தேங்காய் ஒன்று சிறுவனின் தலையில் விழுந்துள்ளது.
இதனையடுத்து காயமடைந்த சிறுவன் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்கென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் இன்று (04) அதிகாலை உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Average Rating