துபாயில் இருந்து போன் மூலம் மனைவிக்கு வரதட்சணை கொடுமை: போலீஸ் விசாரணை!!
கோவை துடியலூர் கணுவாயில் உள்ளது பொன்மணி கார்டன். இந்த பகுதியில் வசிப்பவர் தாமஸ். இவரது மகன் வின்சென்ட் (வயது 37). இவருக்கும் பூமார்க்கெட் பகுதியை சேர்ந்த வின்சி (30) என்பவருக்கும் கடந்த 5 வருடத்துக்கு முன் திருமணம் நடந்தது.
வின்சென்ட் தற்போது துபாயில் வேலை செய்து வருகிறார். வின்சி மாமியாருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் வின்சி துடியலூர் அனைத்து மகளில் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
கூடுதல் வரதட்சணை கேட்டு எனது மாமனார் தாமஸ், மாமியார் ஆனி, கொழுந்தியாள் விஜி ஆகியோர் என்னை கொடுமைப்படுத்துகிறார்கள்.
இது குறித்து துபாயில் உள்ள எனது கணவரிடம் கூறினால் அவரும் என்னிடம் வரதட்ணை கேட்டு போன் மூலம் துன்புறுத்துகிறார். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தாமஸ், ஆனி, விஜி மற்றும் துபாயில் உள்ள வின்சியின் கணவரிடம் போலீசார் விசாரணை நடந்தி வருகிறார்கள்.
Average Rating