மிஸ்டு காலால் வந்த வினை: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபர்!!
மதுரை மகாத்மா காந்தி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மகள் எலிசபெத் (வயது 25). இவருக்கு கடந்த மே மாதம் செல்போனில் ஒரு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டபோது கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்த குருமூர்த்தி (27) என்பவர் பேசினார்.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்துக்கொண்டனர். இருவரும் நெருங்கி பழகியதன் விளைவாக எலிசபெத் கர்ப்பமானதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளுமாறு குருமூர்த்தியிடம் வலியுறுத்தினார். அவரும் திருமணம் செய்து கொள்கிறேன் என்று காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் குருமூர்த்தி இதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக எலிசபெத்துக்கு தெரியாமல் அவரது கருவை கலைக்க திட்டம் தீட்டினார் அதன்படி குளிர்பானத்தில் கருக்கலைப்பு மருந்தை கலந்து எலிசபெத்துக்கு கொடுத்தார். இதன் விளைவாக அவரது கர்ப்பம் கலைந்தது.
தனது வாழ்க்கை கேள்விக்குறியான நிலையில் எலிசபெத் குருமூர்த்தியிடம் சென்று திருமணம் செய்து கொள்ளுமாறு மீண்டும் கேட்டுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்துகொள்ள மறுத்ததோடு அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கு உடந்தையாக அவரது தந்தை வீரப்பெருமாள், தாயார் அமுதவள்ளி ஆகியோர் இருந்துள்ளனர்.
இதுகுறித்து எலிசபெத் திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் குருமூர்த்தி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating