24 இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!!
Read Time:1 Minute, 16 Second
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 24 பேரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மீனவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றில் இன்று ஆஜர்செய்யப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 27 மற்றும் 30ஆம் திகதிகளில் ராமேஸ்வரம், நாகை மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அதே போல், கடந்த 7ஆம் திகதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அனைவருக்கும் இன்று இரண்டாவது தடவையாக விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக மீனவர்களையும், அவர்களுடைய 75 படகுகளையும் விடுவிக்க மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
Average Rating