பீகாரில் துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 தலித் பெண்கள் கற்பழிப்பு!!

Read Time:1 Minute, 51 Second

49135aed-f87b-4b9e-867c-35e4221181b6_S_secvpfபீகார் மாநிலம் போஜ்பூர் அருகில் உள்ள துமாரியா கிராமத்தைச் சேர்ந்த 5 தலித் பெண்கள் பக்கத்து கிராமமான குர்முரி என்ற இடத்துக்கு பழைய இரும்பு சாமான்களை அங்குள்ள கடையில் விற்கச் சென்றனர்.

பின்னர் மாலை நேரத்தில் 5 பெண்களும் ஆண் துணையின்றி தங்களது கிராமத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தனர். இதை கவனித்த பழைய இரும்பு கடை உரிமையாளரான நீல் நிதிசிங் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் அவர்களை வழிமறித்தனர்.

துப்பாக்கியை காட்டி மிரட்டி 5 பேரையும் அவர்கள் இருட்டான பகுதிக்கு கடத்திச் சென்று கற்பழித்தனர். பின்னர் தலைமறைவாகி விட்டனர்.

இவர்களிடம் இருந்து தப்பிய ஒரு பெண் ஊருக்குள் சென்று தெரிவித்தார். அதன்பிறகு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் முதலில் வழக்கு மட்டுமே பதிவு செய்தனர். இதையடுத்து கற்பழிப்பு குற்றவாளிகளை கைது செய்யக் கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து போலீசார் துரிதமாக செயல்பட்டு கற்பழிப்பு குற்றவாளிகள் நில்நிதிசிங், ஜெய்பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

5 தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டதை கண்டித்து அங்கு பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதனால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுபானங்களுக்கான வரி அதிகரிப்பு!!
Next post தெலுங்குதேச தொண்டர்களுடன் மோதல்: நடிகை ரோஜாவை தாக்க முயற்சி!!