கொழும்பு கரையோரப் பகுதிகளில் விஷேட போக்குவரத்துத் திட்டம்!!

Read Time:1 Minute, 40 Second

354163870Untitled-1வௌ்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி வரையான கடற்கரையோர வீதிகளில், நாளை (13) முதல் விஷேட போக்குவரத்துத் திட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வார நாட்களில் மாத்திரம் மீள அறிவிக்கப்படும் வரை இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி காலை 07.00 மணி முதல் 09.30 வரை வௌ்ளவத்தை கடற்கரைப் பகுதிகளில் நெல்சன் வீதி சந்தியில் இருந்து சார்லிமன்ட் சந்தி வரை கொழும்பு நோக்கி மட்டும் வாகனப் போக்குவரத்து இடம்பெறவுள்ளது.

அதேபோல் மாலை 04.00 மணிமுதல் 06.30 வரை வௌ்ளவத்தை கடற்கரை வீதியின் சார்லிமன்ட் சந்தியில் இருந்து நெல்சன் வீதி சந்தி வரை தெஹிவளை நோக்கிச் செல்லும் வாகனப் போக்குவரத்துக்கள் மட்டும் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதை புனரமைப்புப் பணிகள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்க விடுமுறை தினங்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த நடவடிக்கை நடைமுறையில் இருக்காது எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்ட சிக்கல்கள் உள்ள ஜனாதிபதி தேர்தலை எதிர்க்கின்றோம்!!
Next post 115 இராணுவ மேஜர்களுக்கு பதவியுயர்வு!!