தாக்கி, மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இரு பொலிஸார் வைத்தியசாலையில்!!

Read Time:2 Minute, 5 Second

1976347725Untitled-1சட்டவிரோத மதுபான விற்பனை நிலையத்தை சுற்றிவளைக்கச் சென்ற சந்தர்ப்பத்தில் பிரதேச மக்களால் தாக்கி, மரமொன்றில் கட்டி வைக்கப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு ஆராச்சிக்கட்டு – அடிப்பல – லியன்கெலே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, காயமடைந்தவர்கள் சிலாபம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களாவர். இவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் அடிப்பல – வெலன்கெலே பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம் மற்றும் கிருஸ்ணகுமார் ஆகியோர் மாதம்பை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிலாபம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் இருவர் ஆராச்சிக்கட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான விற்பனை நிலையத்தை சுற்றிவளைக்கச் சென்றபோதே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு பொலிஸாரும் மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் தகவலறிந்த சிலாபம் பொலிஸ் அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை விடுவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சிலாபம் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலுக்காக தாக்குதல் – சிறைச்சாலை அதிகாரி கைது!!
Next post கிணறு வெட்டிக் கொண்டிருந்த குடும்பஸ்தர் பலி, மற்றொருவர் காயம்!!